
இவர்களின் உடல்கள் பிறிதொரு இடத்தில் கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டதாக இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார். சரணடைந்த சில பெண்புலிகளைக் கொண்ற இராணுவத்தினர், அவர்களின் உடல்களையும் ஏற்றிச் சென்று புதைத்தாக தற்போது செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது எங்கே எவ்வாறு நடந்தது என்பது குறித்த விபரங்கள் தற்போது அதிர்வு இணையத்தால் பெறப்பட்டு, அவை ஆவணப்படுத்தப்படுகிறது. மேலும் கீழ் காணும் புகைப்படத்தில் உள்ள மூவரையும் இலங்கை இராணுவம் கைதுசெய்து, அவர்களை தமது தற்காலிக முகாமுக்கு கூட்டிச் சென்றுள்ளது.

மே 18ம் தேதி மாலை சுமார் 5.19 க்கு இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப் புகைப்படத்தில் இருக்கும் மூவரும் தற்போது உயிருடன் உள்ளனரா ? இல்லை இவர்கள் யார் என அறிய அதிர்வு இணையம் பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. எனவே இப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தெரிந்தால் உடனடியாக எம்மோடு தொடர்புகொள்ளவும்.
இப்படத்தில் உள்ளவர்கள் புலிகளின் தளபதி ராம் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனைவி பிள்ளைகளைப் பிடித்த இராணுவம் பின்னர் இவர்களைக் காட்டி தளபதி ராமையும் சரணடையச் செய்தனர் என்று சொல்லப்படுகிறது.
புதுமாத்தளான் பகுதியைக் திடீரென இராணுவம் கைப்பற்றியவேளை, அங்கே இருந்த தற்காலிக வைத்தியசாலையில் காயப்பட்டு இருந்த பல பெண்களை இராணுவம் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அவர்களை கேலிசெய்தும், போத்தியிருந்த ஆடைகளைக் களைந்து அவர்களை மானபங்கப்படுத்தியதாகவும், மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கீழ்தரமான இவ்வேலைகளைச் செய்யும்போது மோபைல் போனில் எடுக்கப்பட சில புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக